புதன், 25 ஜூன், 2014

அதிர்ச்சியில் உறைந்த ஐரோப்பா!!

பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும்,தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் இலட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறிஸ்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்து கொண்டிருகின்றனர்.''இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்'' என்ற தலைப்பில் “The Independent” என்ற பிர ட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலைவெளியிட்டுள்ளது.

ஆங்கிலப் பத்திரிகைத் தொகுப்பு: (பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால், தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

2001ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கெடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு இலட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள்என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்றுஎத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலை நகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்தஓராண்டில் பள்ளிவாசல்களில்இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில்எடுத்த கணக்கெடுப்பின் படி 5200நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).

பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள் தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில், நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன் மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .

ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில்,இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரச்சாரத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உந்தப்பட்டு போன்ற ஆபாசங்களும்,அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாதகிறிஸ்தவஉலகம் பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழு வீச்சில் செயற்பட்டு வருகின்றது. பிரிட்டனைச் சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொன்ற CIA, இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிகையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்பந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்தவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறிஸ்தவர்களை தக்க வைக்க முடியாது என்பதை கிறிஸ்தவ மிஷனரிகள் நன்றாக உணர்ந்துள்ளன,பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறிஸ்தவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழ வைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலர்களுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறை வேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்ட படி உலறி கொட்டியது.

ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.

பொது மேடையில் வாசிக்கும் தகுதிகூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்து தான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.

அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று, தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்கு தலைவியாக உள்ளார். இவர்களைப் போன்ற பலர் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர் வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்து வருகின்றனர்.

பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில்…..பவுல் மார்ட்டின்-எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனைப்படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.

(குர்ஆன் குறித்த விவாதத்திற்குவரமால் ஓடி ஒளியும் சானின் (SAN)தந்திரம் தற்போது விளங்குகின்றது,லண்டனைச் சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறிஸ்தவர்கள்குர் னின் அறிவியல் அற்புதங்களைபார்த்து ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி விடுவார்கள் எனபயந்து போய் தந்திரங்கள் செய்துதப்பிக்க நினைகின்றது சான்(SAN)).

டென்னிஸ் ஹார்ஸலி -நான் ஒரு கிறிஸ்தவர், கத்தோலிக்க பள்ளியில் படித்தேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனைப் படிக்கும் போது ஏசு,மேரி,தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறிஸ்தவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால்,தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது தான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)

கதீஜா ரியோபுக்-நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வாரா வாரம் சர்ச்சிற்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை,ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனதுதாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ள முடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியைஉணர்கின்றேன்.

ஹனா தஜீமா-நான் பல மதங்களை ஆய்வு செய்தேன்,குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவதாக இருந்தது. எனவே, ஆழ்ந்த மதப்பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்.

இது கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்துச் சொன்னால் இஸ்லாத்தை ஏற்க கோடிக் கணக்கான கிறிஸ்தவர்கள் இருகின்றனர். இன்ஷா அல்லாஹ்.நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறிஸ்தவ மக்களுக்கு எடுத்து சொல்வது தான் மீதமிருக்கும் வேலை.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)

--ஆங்கிலப் பத்திரிகைத் தொகுப்பு.

சனி, 17 மார்ச், 2012

இலங்கையை சார்ந்த சில முஸ்லிம் அமைப்புகளுக்கு! வேண்டுகோள்!

இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்.

அஸ்ஸலாமு அழைக்கும் அன்பார்ந்த இலங்கை வாழும் இஸ்லாமிய சொந்தங்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று பிரார்த்தித்தவனாக தொடங்குகிறேன்.

ஜெனீவா தீர்மானம் என்பது
நடந்து கொண்டிருப்பது புலிகள் குறித்த விஷயம் அல்ல. போரின் போது வரம்புகளை மீறி அப்பாவி மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை குறித்ததே. ஈழத்திலே நடந்தது ஒரு மிகப்பெரிய இன அழிப்பு என்பதை பற்றி உலகமே பேசும் போது இந்த சூழலில் புலிகள் செய்த கொடுமைகள் பற்றி பேசி அந்த மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்று எந்த ஒரு நடுநிலையான முஸ்லிமும் எண்ண மாட்டான். அப்படி எண்ணுபவன் உண்மையான முஸ்லிமாகவும் இருக்க முடியாது.

எப்போதும் நியாய தர்மங்களை பேசுபவனே, அதை பிரித்து பார்க்க தெரிந்தவனே உண்மையான முஸ்லிமாக, மூமினாக இருக்க முடியும். நமக்கு உலகம் முழுவதும் பாதிப்பு நிகழ்ந்தது அதை யாரும் பேசவில்லை அதனால் அவர்களுக்கு பதிப்பு நடக்கும்போது நாம் வேடிக்கைபார்போம் என்று சொல்வதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. முஸ்லிம்களுக்கு கேடுகளை விளைவித்த புலிகள் போரில் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். அப்படியிருக்க இலங்கையின் மனிதாபிமானம் இல்லாத கோரமான மக்கள் விரோத படுகொலையை கண்டும் காணாதது போல் இருப்பதும், கூடுதலாக அந்த இன படுகொலையை ஆதரிப்பதும் சரியான கருத்து அல்ல.

உங்களுக்கு ஒருவர்மேல் கொண்ட வெறுப்பு அவர்கள் மீது நீதி செலுத்த தடையாக இருக்க வேண்டாம் என்று இஸ்லாம் படித்து தருகிறது. எங்கே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் அவர்கள் நமக்கு எந்த உதவியும் செய்யாவிட்டாலும் குரல்கொடுக்க வேண்டும் இது ஈமானின் ஒரு அங்கம். பதிக்காப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்கும் முகமாக முன்னர் நடந்த கோரசம்பவங்களை நினைவுபடுத்தி தடுப்பது மனிதாபிமானம் அற்ற செயல்.
ஒரு முஸ்லிம் நீதி செலுத்துபவனாக இருப்பான். இலங்கை முஸ்லிம்கள் இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு வகையில் பயங்கரவாததிற்கு துணை போகிறார்கள் என்று கொள்ளலாம்.

இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் வரலாறு முழுவதும் இடையூறுகளை கொடுத்துவந்த யூதர்களை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கொன்று ஒழித்து பழிவாங்கி விடவில்லை. யூதர்கள் இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ்தான் உலகில் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது. மக்கா வெற்றிதான் உலகில் ரெத்தம் இன்றி பெறப்பற்ற ஒரு வெற்றியாகும். மக்காவில் இஸ்லாமிய படைகள் நுழையும் முன்னரே நபி அவர்கள் ( இறைவனின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது உண்டாகட்டும் ) அறிவித்தார்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் இருப்பவர்கள் மீதும் போர் இல்லை என்று. உலகிலேயே கத்தி இன்றி ரெத்தம் இன்றி ஒரு போர் வெற்றி கொள்ளப்பட்ட வரலாறுகளுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள்.

அப்படி மார்க்கத்தை சேர்ந்த நாம் ஒரு இன அழிப்பை, பேரில் கடைபிடிக்க வேண்டிய பன்னாட்டு ஒழுங்குகளை கடைபிடிக்காமல், தடுக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குண்டுகளை பொலிந்து கிட்ட தட்ட நாற்பது ஆயிரம் மக்களுக்கு மேல் கொன்று குவித்து சம காலத்தின் ஹிட்லராக திகழும் ராஜபக்சே அரசின் போர் குற்றங்களை ஆதரித்து அந்த மக்களுக்கு நீதி கிடைக்க விடாது தடுக்கும் இலங்கை முஸ்லிம்களின் நிலை முற்றிலும் தவறானது இது ஒரு வரலாற்று பிழையும் கூட. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஈட்டியை பாய்ச்ச வேண்டாம். குழந்தைகளையும், முதியவர்களையும், நேயாளிகளையும், பெண்களையும், போரில் ஈடுபாடாத மக்களையும், சரணடைந்த மக்களையும் கொல்வது தவறு என்று சொல்லும் சீரிய மார்க்கத்தின் வழிவந்த நாம் எப்படி இந்த இன படுகொலையை ஆதரிக்க முடியும்.

அப்படி நீங்கள் செயல்படுவீர்கள் ஆனால் நீங்கள் இஸ்லாமிய உடைகளை உடுத்தி, இஸ்லாத்தின் பெயர்தாங்கி இஸ்லாத்திற்கு விரோதமாக செயல்படுகிறீர்கள் என்றே அதற்க்கு அர்த்தம். இதை அங்கு வாழும் இஸ்லாமிய தலைவர்கள் அந்த மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். இல்லையேல் இலங்கை முஸ்லிம்கள் மிகபெரிய வரலாற்று பிழையை செய்தவர்கள் ஆவீர்கள். இந்த காரியத்தை நீங்கள் செய்தால் புலிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். அவர்கள் செய்ததற்கு பழிவாங்குகிறேன் என்று சொல்லி அவர்கள் அழிக்கப்பட்ட பின்னரும் அங்கு கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பது என்பது நியாயவான்கள் செய்யும் காரியம் இல்லை.

காலங்கள் மாறும் இதே சிங்கள பேரினவாதமும், அதன் சிந்தனை கூறுகளும் இப்போது உள்ள பிரச்சனை தீர்ந்ததும் அடுத்து அவர்கள் கைவைப்பது முஸ்லிம்கள் மேல்தான் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடவேண்டாம். அதனால் இதுபோன்ற இனவாத அரசு தண்டிக்கப்பட வேண்டும். ஒரு பொதுவான அரசு உருவாக வேண்டும். சிங்கள பேரினவாத இயக்கங்களை தடை செய்யவேண்டும். அதே நேரம் தமிழர்களின் மீள் குடி அமர்வும் அவர்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு சுயாட்சி வழங்கல் வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி அதிகார பகிர்வு அளிக்கப்பட வேண்டும். இதுவே அங்கு பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

இதை விட்டு விட்டு ஒரு பேரினவாத அரசுக்கு இன்று கிடைக்கும் சில இலாபங்களை கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் உதவுவார்களே ஆனால் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்ததும் சிங்கள பேரினவாதத்தின் அடுத்த இரை முஸ்லிம்கள்தான் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடவேண்டாம். ஆதலால் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு செயலை அதாவது ஒரு பகிரங்கமான அநீதி என்று தெரிந்த ஒரு விசயத்தில் நீதிக்கு மாற்றமாக அநீதிக்கு துணை போவதை ஒரு நாளும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான். நீங்கள் ஒருவர் மீது கொண்டு இருக்கும் வெறுப்பு அவர்கள் மீது நீதி செலுத்த உங்களுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்கிற திருக்குர்ஆன் ஆயத்தை இலங்கை முஸ்லிம்களுக்கு நினைவு படுத்தி இந்த வரலாற்று பிழையை விட்டு தவிர்ந்து கொள்ளுமாறு அல்லாஹ்வை கொண்டு எச்சரித்து விடை பெறுகிறேன்.

அன்புடன்: ஆசாத். நெல்லை தமிழ் நாடு இந்தியா.