ஞாயிறு, 23 ஜனவரி, 2011

உயிர் காக்க உதவுங்கள்.


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெருவைச் சார்ந்த நிஹமதுல்லாஹ் [வயது 20] இரு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த 20-01-2011 அன்று அனுமதிகப்பட்டுள்ளார். தற்போது அவர் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் மருத்துவர் ஆலோசனைப்படி உடனேயே மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பொருளுதவி வேண்டும் என்றும் மிக அவசர கோரிக்கை வந்துள்ளது. தற்போது மிகவும் சீரியஸான நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து கடந்த ஐந்து வருடங்களாக குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் நிலையில் இருப்பதாக அவரது சகோதரர் மடலிட்டு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து மீண்டும் மருத்துவ நிதி உதவி கோரியுள்ளார். நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்தால் ஒரு வாலிபர் உயிர்பிழைக்கும் வாய்ப்புள்ளது. கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்யும்மாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். அன்புடன்: ஆசிரியர் - புதியதென்றல்.

A.J. Nihmathullah
A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

Assalamualikum : My brother Nihamathullah 20 years old, He was admitted in Ramachandra Hospital, porur,Chennai in 20 Jan 20011. As a both kidney has affected and nerugenic bladder problem for past 15 years. also past five years he passed urine through cathetral tube, every three month its should be changed. But Now His Blood  serum creatitine level is 20 Blood Urea is 164 . so doctor advised to immediately  start  the hemodayalasis process. Now we do the hemodayalasis process Also he need a dialysis process for every weekly for  two times. per dialysis cost is min Rs.3000/- insha allah after improve his body condition they will advised to kidney transplantation. its cost approx 6 lakhs. Make a dua for his guys. and also if u possible pls help this guy.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

வியாழன், 20 ஜனவரி, 2011

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கைது செய்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிக்கை.

சுவாமி அசிமாந்தாவின் வாக்குமூலத்தின் மூலம் நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ன் மேல்மட்ட தலைவர்கள் சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தீவிரவாதத்தின் பாசறையாக செயல்பட்டுவரும் ஆர்.எஸ். எஸ் தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலம், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் சம்ஜோத்தா ரயில் குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ன் தேசிய தலைவர்களின் பங்கை உறுதி செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ன் தேசிய தலைமை நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த குழு அமைத்து அதன் தேசிய காரிய கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. எனினும் தேசத்திற்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இந்திரேஷ் குமாரை இன்னும் கைது செய்யவும் இல்லை.சம்பந்தப்பட்ட பிற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை வெளியிடவும் இல்லை.

மத்திய அரசாங்கம் 1992க்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் பங்கு உள்ளதா? என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று இ.எம்.அப்துர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார். பாப்புலர்ஃப்ரண்ட் கடந்த சில வருடங்களாக இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் இன்னும் இவ்வழக்கில் ஏற்கெனவே போலியாக சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை இன்னும் திரும்பப்பெறவுமில்லை. அவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளியே விடவுமில்லை என்பது வருந்தத்தக்கது.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குறிவைப்பதை விட்டுவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை முன்பே முயற்சி செய்திருந்தால் தொடர்ச்சியாக நடைபெற்ற தீவிரவாத செயல்கள் தடுக்கப்பட்டிருக்கும்.அதனால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகாமல் பாதுகாத்திருக்க முடியும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் சமூக மற்றும் தேசத்தின் நலன்கருதி ஆர்.எஸ்.எஸ்ன் ஷாகா வகுப்புகள் மற்றும் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

கஷ்மீர் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு.

ஜம்மு,ஜன.11:கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுக் காண்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர்குழு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது. கஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், போராடவும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதை அழுத்தம் திருத்தமாக கூறும் இவ்வறிக்கை கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதற்கு தேவையான அடிப்படை திட்டம் குறித்து வாதிப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஷ்மீர் மக்களுக்கு அவர்கள் விரும்பும் சலுகைகளும், மரியாதையும் அளிப்பதுதான் சரியான வழிக்கான ஆரம்ப சுவடு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் திலிப் பட்காங்கர் தலைமையிலான மத்திய நடுவர்குழு கஷ்மீரின் பலதரப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது

திங்கள், 10 ஜனவரி, 2011

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் தமிழ் மாநில மாநாடு.

சென்னை,ஜன.10:"மாணவர் சமூகமே விழித்தெழு! புதியதொரு சகாப்தம் படைப்போம்!" என்ற முழக்கத்துடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பின் தமிழக மாநில மாநாடு வருகிற 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. மாநாட்டையொட்டி கண்காட்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியன நடத்தப்படும் என கேம்பஸ் ஃப்ரண்டின் தமிழ்நாடு மாநில தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இம்மாநாட்டில் பிரபல தலைவர்கள் பங்கேற்கின்றார்கள்.

மாணவர் சமூகம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான பாதையில் ஒதுக்கித்தள்ள முடியாத சக்தியாகும். சமூக மாற்றத்திலும், தேசத்தின் வளர்ச்சியிலும் உறுதிப்பூண்டு மாணவர்களை வழி நடத்தவேண்டும் என்பதுதான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியம் என தலைவர்கள் தெரிவித்தனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநிலத் தலைவர் எ.ஷாஹுல் ஹமீத், துணைத் தலைவர் எ.முஹம்மது அன்வர் ஆகியோர் பங்கேற்றனர்