செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தோல்வியடைந்த கொள்கைகள்

ஜெர்மனியின் இரண்டரை கோடி பேர் பின்பற்றும் பிராட்டஸ்டண்ட் திருச்சபையின் தலைவர், மார்கோட் கேஸ்மான், குடிபோதையில் வாகனம் ஒட்டியதை அடுத்து கைது செய்யப்பட்ட பின்னர், ஒரு பெரிய தவறை இழைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்த திருச்சபையின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்ட திருமதி கேஸ்மேன், ஹானோவர் நகரில் போக்குவரத்தை நிறுத்தும் சிகப்பு விளக்கை மீறிச்சென்றார்.
சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகம் மது அவரது இரத்தத்தில் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்த முதல் ஜெர்மன் ஆயர் என்ற நிலையை அவர் பெற்றிருந்தார்.இந்த சம்பவம் அவரது பதவியை எப்படி பாதிக்கும் என்பது குறித்து திருச்சபைத் தலைவர்கள் விவாதித்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக